science

img

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல் 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில்  5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

;